15 நாளாக நடந்த நூதன போராட்டம் முடிவுக்கு வந்தது சாலை பணிகளை தொடங்குவதாக அதிகாரிகள் உறுதி

ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் 15 நாட்களாக நடத்திய நூதன போராட்டத்தையடுத்து பொங்கல் பண்டிகைக்குள் சாலை அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலை புதூர்நாட்டில் இருந்து சிங்காரபேட்டை வரை தார்சாலை அமைத்து தரக்கோரி புதூர்நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் கடந்த 15 நாட்களாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித பயனும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் போராட்ட குழுவினருக்கு திருப்பத்தூர் சப்-கலெக்டர் கார்த்திகேயன் அமைதி கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி நேற்று திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மலை கிராம பிரமுகர்கள், தாசில்தார் ஸ்ரீராம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புதூர்நாடு – சிங்காரப்பேட்டை வரையிலான அனைத்து கிளை சாலைகளும் போடப்பட்டுள்ளது. இந்த சாலை வனத்துறை சாலை என்பதால் வன பாதுகாப்பு சட்டம் மற்றும் அதுதொடர்பான சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகளின்படி பல்வேறு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி செயல்பட்டால் மட்டுமே உறுதியான நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. ரூ.4 கோடியே 73 லட்சம் நிதியும் தயாராக உள்ளது, அனுமதி கிடைத்த உடன் பணிகள் தொடங்கப்படும். வருகிற பொங்கல் பண்டிகைக்குள் சாலை பணிகள் தொடங்கப்படும். மாணவர்களின் எதிர்கால நலன்கருதி போராட்டத்தை கைவிட வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து போராட்ட குழுவினர் அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று கொண்டு, தங்களது போராட்டத்தை கைவிட்டனர். மேலும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவும் சம்மதம் தெரிவித்தனர்.

மாவட்டம் முழுவதும் 82,514 மாணவ-மாணவிகள் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்

வேலூர்,

கடந்த கல்வியாண்டு வரை 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன.

அதில் இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 41 ஆயிரத்து 127 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.

வேலூர் கல்வி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 911 பேரும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 216 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

இதேபோல் பிளஸ்-2 தேர்வை வேலூர் கல்வி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 736 மாணவ- மாணவிகளும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 651 மாணவ- மாணவிகளும் என மொத்தம் 41 ஆயிரத்து 387 பேர் எழுத உள்ளனர்.

82,514 பேர் எழுதுகிறார்கள்

இதன்மூலம் மொத்தம் 82 ஆயிரத்து 514 மாணவ- மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். கடந்த ஆண்டுவரை பிளஸ்-2 தேர்வுக்கு வேலூர் கல்வி மாவட்டத்தில் 79 தேர்வு மையங்களும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 66 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டது.

தற்போது பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக நடத்தப்படுவதால் வேலூர் கல்வி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களும் கூடுதலாக அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

பேரணாம்பட்டு,

தமிழக அரசின் சார்பில் பேரணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி (ஆண்கள் மற்றும் பெண்கள்), அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நுஸ்ரதுல் இஸ்லாம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி (பேரணாம்பட்டு, டி.டி.மோட்டூர்), மேல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி பேரணாம்பட்டு டவுன் இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மரீத் கல்வி அறக்கட்டளை தாளாளர் ஜஹீர்அஹமத் தலைமை தாங்கினார். இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நிசார்அஹமத், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜவகர்உசேன் வரவேற்றார்.

அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் சிவாஜி, தேவலாபுரம் ஈ.வெங்கடேசன், மாவட்ட இணை செயலாளர் சந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ. கனகதாரா, அரசு வக்கீல் டில்லிபாபு, முன்னாள் கவுன்சிலர்கள் திருமால், ஆனந்தன், சிவக்குமார், கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டெங்கு கொசுப்புழு உற்பத்தி: தனியார் பள்ளி, விடுதிக்கு அபராதம்

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கலெக்டர் ராமன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான வீடு, கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்குட்பட்ட இடையன்சாத்து பகுதியில் கலெக்டர் ராமன் நேற்று காலை டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பணியை ஆய்வு செய்தார்.

அப்போது வீடு, வீடாகவும், குடிநீர் தொட்டிகளிலும் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகியிருக்கிறதா? என்று பார்வையிட்டார். வேலூர் காந்தி ரோட்டில் உள்ள தனியார் விடுதிகளில் உதவி கலெக்டர் செல்வராஜ் தலைமையில் மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட ஒரு விடுதிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தனியார் பள்ளி

அதேபோன்று காட்பாடி காந்தி நகரில் 1-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையிலான சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, அங்குள்ள ஒரு தனியார் பள்ளி வளாகம் முழுவதும் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பைகளில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மாநகராட்சியின் மற்ற பகுதிகளிலும் டெங்கு கொசுக்களை கண்டறியும் பணி நடந்தது.

வருமானவரி சோதனையை முன்கூட்டியே நடத்தி இருக்க வேண்டும் சரத்குமார் பேட்டி

வாணியம்பாடி,

வாணியம்பாடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்துவிட்டார்கள். இதைவிட இலவச கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை கொடுத்து இருக்கலாம். தற்போது மத்திய அரசை பற்றி குறை சொன்னால் படம் நன்றாக ஓடும். ஒரு லட்சம் கோடியில் புல்லட் ரெயில் விடுவதை விட அனைத்து கிராமப்புறங்களிலும் மின்வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக இல்லை. எம்.ஜி.ஆருக்கு பின் எனக்கு அரசியல் கற்று கொடுத்தவர் கருணாநிதி. அதற்காக தான் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன்.

விஸ்வரூபம் திரைப்படம் குறித்து பிரச்சினைகள் வந்தபோது கமலஹாசன் எதிர்த்து குரல் கொடுக்காமல் சிங்கம் குகையில் இல்லாதபோது குரல் கொடுப்பது ஏன்?.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது நடத்தி வரும் வருமானவரித் துறை சோதனையை மத்திய அரசு முன்கூட்டியே நடத்தி இருக்க வேண்டும்.

ஜெயலலிதா இருந்த போது பேசாத அமைச்சர்கள் தற்போது தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் முரனாண கருத்துகளை தெரிவித்து வருவதால் மக்கள் ஏளனமாக பேசுகின்றனர். எனவே அமைச்சர்கள் பேசும் போது தங்கள் கருத்துகளை ஆராய்ந்து பேசவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Vellore police lay down rules for Vinayaka Chathurthi

Vellore: District police on Friday urged Hindu outfits and festival organising committees to adhere to rules and regulations during the upcoming Vinayaka Chathurthi celebrations.

Chairing the consultative meeting with the Hindu outfits such as Hindu Munnani and BJP party functionaries at the district police office on Friday, district superintendent of police P Pakalavan said the festival organising committee members would be held responsible if anything went wrong.

The SP said motor vehicles should be used for taking out the idols on procession. Prior permission from police stations is necessary for erecting the idols.

The idols should not be above 10ft, including the base. “The organising committees should also ensure the safety of the idols erected in public places. Permission will not be given to erect the idols within 500m from places of worships, educational institutions, state and central government buildings and hospitals. At least five members of the committee should present at any point of time near the idols,” said the SP. He said the department would take all precautionary measures to avert such incidents this year.

JACTTO-GEO members launch ‘waiting protest’ in Vellore

VELLORE: Over 200 members of Joint Action Committee of Tamilnadu Teachers’ Organisation – Government Employees Organisation (JACTTO-GEO) on Thursday staged waiting protest in front of Vellore Collectorate pressing their demands.
The members were arrested and taken to a marriage hall in the city. After being released at 5pm, a section of the protesters marched towards the Collectorate and resorted to the waiting protest.
The members have been staging a series of protest demanding to repeal the contributory pension scheme, implement the eight pay commission recommendations and rectify the anomalies of the seventh pay commission.

Special passport mela in Vellore

VELLORE: Regional Passport office, Chennai, will organise a special passport mela on Saturday at the Post Office Passport Seva Kendra, Vellore.

The aim of the mela is to meet public demand and to facilitate submission of applications for frequent travellers due to the extended time in getting appointments, said a press statement from the Press Information Bureau.

The Passport Seva Kendra will accept applications as per time slots allotted to applicants on Saturday. Around 65 applicants are expected to benefit from the Mela.

Those who wish to participate in the mela, should log on to www.passportindia.gov.in, register, generate Application Registration Number (ARN), pay the fee online and take an appointment. They should bring a print out of the ARN with appointment details to the seva kendra, along with requisite documents in originals and a set of self-attested photocopies. Applications under fresh and re-issue categories only will be accepted, said the release.

The appointments would be released on Wednesday at 2.30pm. Walk-ins including on-hold and refused tokens will not be entertained, added the release.

About Vellore!

Vellore, the Head-Quarters of Vellore District situated in 12′ 35′ N and 79′ 9′ E , has a very interesting History of its own. A strategically located town, it is well connected by Rail and bus routes to major towns of the neighboring states like A.P. Karnataka and Kerala. The History of the district assumes a great significance and relevance, as we unfold the glorious past.